தமிழகத்திற்கு தடுப்பூசிகளை வாரி வழங்கி அசத்திய மத்திய அரசு!
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 5 லட்சத்து 81 ஆயிரத்து 270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 810 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 5 லட்சத்து 81 ஆயிரத்து 270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 810 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 2 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதனிடையே கூடுதலான தடுப்பூசிகள் போடுவதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து தடுப்பூசிகளை அனுப்பி வைத்து வருகிறது.
தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் சென்னைக்கு மட்டும் 42 ஆயிரத்து 770 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 25 ஆயிரத்து 290 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.