முககவசம், சானிடைசர் இனிமேல் இந்த விலைக்குதான் விற்கனும்.. தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் அதிகளவு இருந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

Update: 2021-06-08 11:22 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் அதிகளவு இருந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.




 


இந்நிலையில், கொரோனா பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே அதிகளவு பயன்படுத்தும், மாஸ்க், சானிடைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.




 


அதன்படி, மூன்று அடுக்குகள் கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க் ரூ.4.50க்கும், என் 95 மாஸ்க் 22 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதே போன்று சானிடைசர் 200 மில்லி 110 ரூபாய்க்கும் பிபிஇ கிட் 273 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News