சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Update: 2021-06-14 12:58 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.




 


இந்நிலையில், மீண்டும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறியிருப்பதாவது: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும். 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்.


 



மேலும், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News