கொரோனா கைமீறி போச்சு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.!
இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று தலைமை நீதபதி அமர்வு அரியர் வழக்கை விசாரித்து வந்தது. அப்போது இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. இதனால் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தடுப்பூசி பற்றியான வருகின்ற செய்திகள் உண்மையா எனவும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ''தற்போது தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பு உள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டது எனக்கூறினார்.