தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது: ராமதாஸ்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனிடையே தொற்று பரவாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனிடையே தொற்று பரவாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் படுக்கைகள் கிடைக்காமல் 10 நோயாளிகள் அவசர ஊர்திகளில் காத்திருந்த நிலையிலேயே உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகும்.
உலகின் அனைத்து நாடுகளையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் அதன் தாக்கத்தை காட்டுவதை தடுக்க முடியாது. ஆனால், முறையான நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மை மூலம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான பணிகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.
உலக சுகாதார நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கொரோனா படிப்பினைகளுக்கான பன்னாட்டுக்குழு நேற்று வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை நான் படித்த போது இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது. பொது சுகாதார வல்லுனர்கள் வழங்கிய அறிவுரைகளை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்திருந்தால் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொரோனா பரவலும், உயிரிழப்பும் மோசமாகாமல் தடுத்திருந்திருக்க முடியும்.
முழு ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும், கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும், முகக்கவசம் அணிவதை தீவிரப்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை தான் பொது சுகாதார வல்லுனர்கள் வலியுறுத்திய விஷயங்கள் ஆகும். தமிழ்நாட்டிலும் இத்தகைய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலை ஏற்பட்ட நாளிலிருந்து நானும் இது குறித்த ஆக்கப்பூர்வ யோசனைகளை வழங்கி வருகிறேன். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பின்பற்றப்படாதது தான் நிலைமை மோசமானதற்கு காரணம்.