கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம்.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஸ்ரீவில்லிபுத்தூர். உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைகீழாக நின்றும், ராமேஸ்வரத்தில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-25 05:39 GMT

தமிழகம் முழுவதும் பக்தர்கள் வழிபடுவதற்கு கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொறறு பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது தொற்று குறைந்த காரணத்தினால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தொற்று குறைந்து வரும் நிலையில், கோயில்களையும் திறக்க வேண்டும் என இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று கோயில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஸ்ரீவில்லிபுத்தூர். உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைகீழாக நின்றும், ராமேஸ்வரத்தில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Similar News