தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-11 13:17 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.

எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News