கொரோனா அதிகரித்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை.!
கொரோனா வைரஸின் 2வது அலையை சமாளிப்பதற்கு தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அந்த கட்டுப்பாடுகள் பலன் அளிக்காதபோது, இரவு நேர ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸின் 2வது அலையை சமாளிப்பதற்கு தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்காத போது, இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும். எனவே அனைவரும் அரசு கூறிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 14 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.