தி.மு.க ஆட்சியில் அதிக ஊழல் நடக்கிறது - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

தமிழக நலனில் பா.ஜ.க அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி.

Update: 2023-02-05 01:42 GMT

பா.ஜ.க மட்டும் தான் தமிழக நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது என்று பா.ஜ க தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருக்கிறார். அந்த வகையில் அந்த கட்சியின் பொது செயலாலர் வினோத் பேட்டியின் போது தற்பொழுது மீண்டும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். நேற்று பா.ஜ.க சிந்தனையாளர் பிரிவு வழக்கறிஞர் பிரிவு தொழில் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களுக்கான கலந்துரையாடல் சென்னை கிண்டியில் நடை பெற்றது. பா.ஜ.க பொது செயலாளர் மற்றும் மேலிட பொறுப்பாளர், மாநில தலைவர், மாநில துணைத்தலைவர் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.


மேலும் பாரதிய ஜனதா தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கை சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க மட்டுமே தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க சிறப்பாக வளர்ந்து வருகிறது. மத்தியில் உள்ள ஆட்சியில் பா.ஜ.க விளங்குகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதை தமிழக அரசு உண்மையாக பயன்படுத்த வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் பேசிய பொது செயலாளர் கூறினார்.


மேலும் மத்திய பா.ஜ.க அரசு இளைஞர்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மதுவின் கொடுமை அதிகமாக இருக்கிறது. அதை தடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் அதிக ஊழல் நடக்கிறது என்று அவர் கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News