தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-05-04 13:22 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வருகின்ற 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.




 


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையையே நிலவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News