தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.!

இன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-07 13:42 GMT

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை கொரோனா தொற்று நெருங்கியுள்ளது. இன்று மட்டும் 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




 


இந்நிலையில், இன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர்.


 



இன்று 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்து 70 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News