தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதில் 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-09-23 00:00 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதில் 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்தவர்கள் உட்பட 1682 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இதில் 959 பேர் ஆண்கள், 723 பேர் பெண்கள் ஆவார். இதனால் மொத்த பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 027 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் 15 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து 1627 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: TopNews Tamil


Tags:    

Similar News