தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. 1087 பேர் பாதிப்பு.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று 1087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று 1087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாடு முழுவதும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரத்து 450 (8,64,450) ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு போன்று தொற்று அதிகரித்து விடுமோ என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.