தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் !

திமுக ஆட்சி அமைந்த பின்னர் நேற்று பொது படஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

Update: 2021-08-14 03:50 GMT

திமுக ஆட்சி அமைந்த பின்னர் நேற்று பொது படஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, மருத்துவம், கோயில் உள்ளிட்ட துறையில் திட்டங்கள் வகுப்பது மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று முதன் முதலாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

Source: Topnews

Image Courtesy: Topnewstamil

https://www.toptamilnews.com/tamil-nadu-legislature-files-agriculture-budget-today-for-the-first-time-in-history/

Tags:    

Similar News