தமிழகத்தின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்பு.!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்கிறார்.

Update: 2021-05-10 05:12 GMT

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்கிறார்.

தமிழகத்தின் 15வது சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்து தற்போது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

நாளை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முறைப்படி பதவி ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

திவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கு.பிச்சாண்டி போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

Similar News