ஏமாற்றவா குறைதீர் கூட்டம் நடத்துகிறீர்கள்? - கொந்தளிக்கும் விவசாயிகள்

Update: 2022-04-30 11:55 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆட்சியர் மீது குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கூட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதற்கான பணம் பிடிக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதமாகியும் உரம் வழங்கவில்லை என்று ஆட்சியர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கூட்டம் வெறும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றது என்றனர்.

Source, Image Courtesy: News 18 Tamil

Tags:    

Similar News