தமிழகத்தில் பயங்கரவாதிகள் உடுருவலா ? உளவுதுறை ரிப்போர்டால் அச்சத்தில் மக்கள் !

Breaking News.

Update: 2021-09-16 23:45 GMT

சில நாட்களுக்கு முன் டெல்லியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிகள் பெற்றவர்கள் எனவும் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மத்திய உளவு துறை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதாலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாலும் தாக்குதல் நடத்தவும் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பும் தேடுதல் வேட்டையும் அதிகரித்துள்ளது. சதி வேலைகள் நடைபெறா வண்ணம் கண்காணித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்

Source: Malaimalar

Tags:    

Similar News