குன்னூரில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம்!

Update: 2022-02-17 10:56 GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக செப்டிங் டேங்க் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது, ஐந்து மாத சிசுவின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் சிசுவின் சடலத்தை செப்டிக் டேங்கில் இருந்து எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார், யார் பிரசவ வார்டு பகுதியில் சிகிச்சை எடுத்தனர் என்ற தகவலை போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் யார் சிசுவை கழிவுநீர் தொட்டில் போட்டது என தெரியவரும்.

Source: Daily Thanthi

Image Courtesy: Vikatan

Tags:    

Similar News