அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

Update: 2021-11-18 12:49 GMT

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகாமையில் தெற்கு ஆந்திராவிற்கு இடையில் நாளை (நவம்பர் 19) கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் அதி கனமழை பெய்யலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து சுமார் 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை மற்றும் எண்ணூர், காட்டுபள்ளி, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News