இறந்தவர் பெயரில் பட்டாசு கடை நடத்திய தி.மு.க நிர்வாகி - அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்
கூடுவாஞ்சேரியில் இறந்தவர் பெயரில் தி.மு.க நிர்வாகி ஒருவர் பட்டாசு கடை நடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடுவாஞ்சேரியில் இறந்தவர் பெயரில் தி.மு.க நிர்வாகி ஒருவர் பட்டாசு கடை நடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் தி.மு.க கவுன்சிலரின் பட்டாசு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒன்றிய கவுன்சிலர் பெருமாநாட்டுநல்லூர் ரவி தனது உறவினரான ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.சேகர் என்பவர் பெயரில் பட்டாசு கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் சேகர் உயிரிழந்த நிலையில் அதனை மறைத்து வைத்து மீண்டும் இந்த தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். இந்தநிலையில் இறந்தவர் பெயரில் பட்டாசு கடை எப்படி அனுமதி வழங்கப்பட்டது என புகார் பொதுமக்களால் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆவின் போது இறந்தவர் பெயரில் பட்டாசு கடை நடத்தி முறைகேடு செய்தது உறுதியானதால் செங்கல்பட்டு வட்டாட்சியர் உரிமம் இல்லாத அந்த பட்டாசு கடை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.