பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறதா? தமிழக அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

விழுப்புரம் மாவட்டம், அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துனர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-12-10 03:47 GMT

விழுப்புரம் மாவட்டம், அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துனர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (டிசம்பர் 9) விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற அரசுப் பேருந்தில் இருந்து கோனூருக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் குறைந்தளவு பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது இளம்பெண்ணுக்கு நடத்துனர் சிலம்பரசன் 32, பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அரசு போக்குவரத்துகழக நடத்துனர் சிலம்பரசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு நேரங்களில் பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கு தற்போதைய சூழலில் பயந்து நடுங்கும் நிலையை அரசு போக்குவரத்து கழகம் உருவாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: PuthiyaThalamurai


Tags:    

Similar News