திருவெண்ணெய்நல்லூர் கோயிலில் அம்மன் சிலை திருட்டு: அதிர்ச்சியில் பக்தர்கள்!

Update: 2022-01-12 05:18 GMT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் தீப்பாஞ்சம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலின் தர்மகர்த்தாவாக முருகன் இருக்கின்றார். இவர் கடந்த 8ம் தேதி இரவு கோயில் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

மீண்டும் அதற்கு அடுத்த நாள் காலை கோயிலை திறக்க வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது.

மேலும், கோயிலில் இருந்த சுமார் 75 கிலோ எடையுள்ள அம்மன் சிலையும் காணாமல் போயுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே திருடிச்சென்றவர்கள் சிலையை தூக்க முடியாமல் சிறிது தூரம் தூக்கிச் சென்று போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் திருடு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Daily Thanthi


Tags:    

Similar News