தேனி: தக்ஷிணாமூர்த்தி கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள சிலைகள்திருட்டு ! காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை!

தேனி பிரசித்தி பெற்ற வேதபுரி ஆசிரமம் தக்ஷிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்த கோயிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

Update: 2021-10-27 10:09 GMT

தேனி பிரசித்தி பெற்ற வேதபுரி ஆசிரமம் தக்ஷிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்த கோயிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில், வேதபுரி ஆசிரமம் தக்ஷிணாமூர்த்தி கோயில் வளாகத்தில் பல லட்சம் மதிப்புள்ள சிலைகள் திருட்டு  போயுள்ள சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இது பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கோயிலில் சென்று பார்வையிட்டனர். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிலைகளை மீட்க வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Hindu Munnani

Tags:    

Similar News