திருச்செந்தூரில் 3'வது நாளாக தொடரும் மின்வெட்டு - ஆத்திரத்தில் பொதுமக்கள்!

Update: 2022-04-23 12:41 GMT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3வது நாளாக மின்வெட்டு இருக்கிறது. தொடர்ந்து காலை முதல் இரவு வரையிலும் மின்வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். அதிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளான பரமன்குறிச்சி, நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு, தண்டுபத்து, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட 200க்கும் அதிகமான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

அதிலும் கைக்குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். புழுக்கத்தில் குழந்தைகளை தூங்க வைக்க முடியாமல் வாசலிலும், மொட்டை மாடியிலும் தஞ்சை மடையும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. எனவே உடனடியாக மின்வெட்டு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source,Image Courtesy News 18 Tamilnadu


Tags:    

Similar News