திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் வழக்கு தொடர உரிமை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருபவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2021-11-05 11:02 GMT

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருபவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்க கோரி கலைச்செல்வி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறும்போது, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டரீதியாக உரிமை இல்லை என்றார்.

மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான முன் விரோதம் காரணமாக வழக்கு தொடர்ந்ததால் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.

Source, Image Courtesy: DailyThanthi


Tags:    

Similar News