பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோயால் 2 பேர் உயிரிழப்பு.!

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-31 09:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகரான கலியபெருமாள் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.


 



அதே போன்று அருமடல் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Tags:    

Similar News