நெல்லையில் இருபிரிவினரிடையே மோதல்: ஏராளமான போலீஸ் குவிப்பு.!

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2021-06-18 06:10 GMT

திருநெல்வேலி மாவட்டம், முன்னிர் பள்ளத்தில் நேற்று இரவு கால்வாயில் பால மகேஷ் என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த பால மகேஷ் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வீடு, வாகனங்களை சேதப்படுத்தி தீ வைத்தனர்.




 


இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் இரண்டு தரப்பினரும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், எஸ்.பி. மணிவண்ணன் இரண்டு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News