5 வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் தமிழக செட் தேர்வு.. உயர் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்படுமா?

ஐந்து வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் செட் தேர்வை நடத்த கோரி தேர்வர்கள் கோரிக்கை.

Update: 2023-06-23 02:23 GMT

மத்திய அரசின் UGC சார்பில் உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வான NET தேர்வை ரெகுலராக நடத்தி வரும் நிலையில், மாநில தகுதி தேர்வான SET தேர்வை மட்டும் ஏன் 5 ஆண்டுகளாக தமிழக அரசு நடத்தாமல் இழுத்தடிப்பது உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் மாநில அரசின் தகுதி தேர்வு மிகச் சரியான வகையில் தொடர்ச்சியான முறையில் நடத்தி வருகிறார்கள்.


தமிழகத்தில் மட்டும் கடத்த அறிந்த ஆண்டுகளாக இந்த தீர்வை ஏன் நடத்தவில்லை? என்று தேர்வர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக பல்கலைக்கழகம், கல்லுாரி போன்றவற்றில் உதவி பேராசிரியர் பணிக்காக வேலை செய்வதற்கு Ph.D அல்லது NET/SET தேர்வு முடித்திருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானிய குழு வைத்திருக்கும் நிபந்தனை விதிமுறை. நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வு சற்று கடினமாக இருக்கும் காரணத்தினால் மாநில அரசு நடத்தும் தகுதி தேர்வை எதிர்பார்த்து பல்வேறு தேர்வர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


2018 ஆம் ஆண்டு கடைசியாக கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் சார்பில் 'SET' தேர்வை தமிழக அரசு நடத்தியது. அதன்பின் 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்நிலையில் 2018க்கு பின் தமிழக அரசு மாநில தகுதி தேர்வை நடத்துவதற்கான அனுமதி அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நோட்டல் அனுமதி வழங்கி இருக்கிறது ஆனாலும் தேர்வு நடத்த வில்லை, விரைவில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News