தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அவசரமாக டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் அழைத்ததின் பேரில் ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2021-12-05 13:25 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் அழைத்ததின் பேரில் ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் நாளை (டிசம்பர் 6) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நாகலாந்தில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாகலாந்தில் சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி முன்னர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். எனவே பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பதில் அத்துபிடி உள்ளவர் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் அவசரமாக ஆளுநரை டெல்லி அழைத்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News