தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொழில்துறையில் நிலவிய தேக்கம் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை 40 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-03-13 05:48 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொழில்துறையில் நிலவிய தேக்கம் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை 40 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.




 


இதனையடுத்து முதலீடுகள் குறைந்ததால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், பெரிதாக மாற்றம் இருக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ரூ.4,230க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.33,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 



 


அதே போன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் அதிகரித்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Similar News