கும்பகோணம்: வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்: அமமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு.!

இந்த டோக்கனுடன் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள மளிகைக் கடைக்கு பலர் சென்று ரூ.2,000க்கு பொருள்களைக் கேட்டனர்.

Update: 2021-04-08 06:52 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்களார்களுக்கு பணம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்ததாக அரசியல் கட்சிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்த சம்பவம் தொடர்பாக அமமுக பிரமுகர் மீது காவல்துறையினர் இன்று (ஏப்ரல் 8) வழக்குப்பதிவு செய்தனர்.கும்பகோணம் தொகுதியில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு அன்று அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு மளிகைக் கடை பெயருடன் ரூ.2,000 என அச்சிடப்பட்டு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.




 


இந்த டோக்கனுடன் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள மளிகைக் கடைக்கு பலர் சென்று ரூ.2,000க்கு பொருள்களைக் கேட்டனர். ஆனால், இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக் கடை உரிமையாளர் வந்தவர்களிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், கடையின் முன்பாக வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்தவிதத் சம்பந்தமும் இல்லை என்றும், இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது எனவும் அச்சிட்டு ஒட்டினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதன்பேரில் கொரநாட்டுக் கரூப்பூரைச் சேர்ந்த அமமுக நிர்வாகி கனகராஜ் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் டோக்கன் கொடுத்து ஏமாற்றும் சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

Similar News