தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், விலை வீழ்ச்சி.. செடியிலேயே அழுகும் நிலை.!

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக உள்ளது. இந்த முறை விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி பெருமளவில் வயலிலேயே அறுவடை செய்யாமல் விட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2021-03-23 07:59 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக உள்ளது. இந்த முறை விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி பெருமளவில் வயலிலேயே அறுவடை செய்யாமல் விட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், மொரப்பூர், இண்டூர், பாலவாடி உள்ளிட்ட இடங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர்.




 


தற்போது, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் உள்ளிட்ட ஊர்களில் ஏராளமான தக்காளி அறுவடை செய்யப்படும் காரணத்தினால் அந்த ஊர் வியாபாரிகள் தர்மபுரிக்கு சென்று வாங்குவது குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை அனைத்து ஊர்களிலும் சரிந்துள்ளது. தர்மபுரியில் கடந்த ஒரு வாரமாக கிலோ 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். மேலும், தக்காளி அறுவடை செய்யும் வேலையாட்களுக்கு கூட கூலி அளிக்க முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News