திண்டுக்கல் புறவழிச்சாலையில் 30 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்.!

திண்டுக்கல் மதுரை புறவழிச்சாலையான தோமையார்புரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரிக்கை செய்தார்.

Update: 2021-05-18 10:14 GMT

திண்டுக்கல் மதுரை புறவழிச்சாலையான தோமையார்புரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரிக்கை செய்தார்.

அது மட்டுமின்றி தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.


 



தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, வெளியில் சுற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டது.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீசார் இரவு, பகல் என்று பாராமல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News