தந்தையை மிஞ்சிய தமையன்... என்னடா இது தமிழுக்கு வந்த பெருஞ்சோதனை...

அரசு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதியின் 10 நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

Update: 2023-04-15 04:19 GMT

சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியின் சார்பில் தமிழ்நாடு பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் சென்னை மேயர் என பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்து இருக்கிறார்.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்புகள் மற்றும் நவீன சிகிச்சை கருவிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர், சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் அவர்கள் படிக்க வேண்டிய குறிப்புகளை உதயநிதி படித்தார். இந்த ஒரு பத்து நிமிட காணொளி காட்சி தான் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல் ஆகி வருகிறது.


குறிப்பாக இந்த பத்து நிமிடம் வீடியோவில் பல்வேறு இடங்களில் அமைச்சர் பேப்பரை பார்த்து தவறுதலாக தமிழில் உச்சரித்து இருக்கிறார். தொடர்ச்சியாக ஒரு கோர்வையாக அவர் பேசவில்லை என்றும் தமிழில் வளர்க்க நீங்கள் எப்படி பாடுபட்டு வளர்கிறீர்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லி பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

Input & Image courtesy: Mediyaan

Tags:    

Similar News