முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி.!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 03:25 GMT

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Similar News