டாஸ்மாக் கடை திறக்க கூடாது என களத்தில் இறங்கிய பெண்கள் - தென்காசியில் பரபரப்பு

Update: 2022-05-06 11:03 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகாமையில் உள்ள வீரசிகாமணி நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், வீரசிகாமணியிலிருந்து அருணாசலபுரம் செல்கின்ற வழியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தில் டாஸ்மாக் கடை விரைவில் திறக்க இருப்பதை கேள்விப்பட்ட அருணாசலபுரம், அரியநாயகிபுரம், அச்சம்பட்டி, மீனாட்சிபுரம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதில் கலந்து கொண்ட பெண்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை முன்வைத்தனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News