முத்தலாக் கூறியதை எதிர்த்த மனைவியை பலமுறை கத்தியால் தாக்கிய கணவன் - போலீசார் வலைவீச்சு
உத்தரபிரதேசத்தில் மனைவியிடம் முத்தலாக் கூறியதை எதிர்த்த காரணத்தினால் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அபித் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக்காக தன மனைவி அஸ்மாவை வற்புறுத்தினர் என கூறப்படுகிறது, மேலும் அஸ்மா என்ற பெண்ணால் தன கணவன் அபித்'திற்கு வரதட்சினை கொடுக்க முடியாத காரணத்தினால் அடிக்கடி சண்டை நடைபெறும் என தெரிய வந்துள்ளது. கணவனின் கோரிக்கைகளை அஸ்மா நிறைவேற்ற முடியாமல் போனதால், அபித் அவளுக்கு முத்தலாக் கொடுத்தார் என்று இந்தி நாளிதழ் 'ஜாக்ரன்' தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பூர்வா இலாஹி பக்ஷ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்ததாக கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, அஸ்மாவின் குடும்பத்திடம் இருந்து பணத்துக்காக அபித் மற்றும் அவரது மனைவி அஸ்மா இடையே சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் சூடுபிடித்ததால், ஆத்திரத்தில், அபித் மூன்று முறை தலாக் என்று கத்தினார், திருமணம் முடிந்துவிட்டதாக அறிவித்தார். இதற்கு ஆஸ்மா எதிர்ப்பு தெரிவித்ததால், அபித் அவரை பலமுறை கத்தியால் குத்தினார்.
படுகாயம் அடைந்த அஸ்மா அலறத் தொடங்கியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் தாக்குதல் நடத்தியதை அறிந்து, பெற்றோரிடம் தெரிவித்தனர். அஸ்மாவின் பெற்றோர், அவரது மாமியார் வீட்டிற்கு விரைந்து வந்து, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அஸ்மாவுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்மா மற்றும் அபித் ஆகிய இருவருக்கும் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக அஸ்மா குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர். தம்பதியருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். அபித் ஒரு குடிகாரர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அபித் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த சில நாட்களாக அஸ்மா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பத்து லட்சம் ரூபாய் கேட்டு வந்தனர். அஸ்மா தனது தாய்வழி குடும்பத்திடம் இருந்து கொஞ்சம் பணத்தை கொண்டு வந்திருந்தாலும், மாமியார்களுக்கு கொடுக்க, மேலும் பணத்திற்கான கோரிக்கை தொடர்ந்தது.