பீகார்: முங்கர் வன்முறையில் அலட்சியமாக இருந்த ஐந்து காவல் அதிகாரிகள் இடமாற்றம்.!
பீகார்: முங்கர் வன்முறையில் அலட்சியமாக இருந்த ஐந்து காவல் அதிகாரிகள் இடமாற்றம்.!
முங்காரு வன்முறையில் போலீஸ்அலட்சியத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அப்பகுதியை சேர்ந்த 5 நிலைய ஹவுஸ் அதிகாரிகள் (SHO) தங்கள் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய அலட்சியம், பக்தர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் துர்க்கையை கரைக்கும் நிகழ்வின்போது வன்முறை ஏற்பட்டு ஒரு மாணவரின் இறப்பிற்கும் பலரின் காயங்களுக்கும் காரணமானது.
முபசில், பசுடோபூர், கோட்வாலி, காஷிம்பஜார் மற்றும் புராப்சராய் காவல் நிலையங்களின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் (எஸ்.எச்.ஓக்கள்). போலீஸ் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சனைக்கு அவர்கள்தான் காரணம் என பொறுப்பேற்க வைத்து அவர்களை மாற்ற பரிந்துரை செய்த பிறகு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வை பற்றி தெரிந்த ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், இந்த அதிகாரிகள் முன்கர் பகுதியில் ஏற்பட்ட சூழ்நிலைக்கு பதிலளிக்கையில் மிகவும் கவனக்குறைவாக இருந்ததாகவும், அவர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு இருந்தால் பிரச்சனை வளர்வது தடுக்கப்பட்டு வன்முறை தடுக்கப்பட்டிருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
தேர்தலை முன்னிட்டு மாதிரி நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அவர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரியுள்ளது.
தகவல்களின்படி அக்டோபர் 26, 2020 அன்று நவராத்திரி முடியும் வேளையில் துர்க்கையை கரைக்கும் நிகழ்ச்சியின்போது பக்தர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் மோதல் வெடித்தது. வழக்கமாக விஜயதசமிக்கு பிறகுதான் இச்சிலைகள் கரைக்கப்படும். ஆனால் புதன்கிழமை சட்டசபை தேர்தல்கள் தொடங்கவிருந்த நிலையில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நிகழ்வு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்ட படி நடுராத்திரி பிறகு கிளம்பினர் என்றாலும் அதிகாரிகள் ஹிந்துக்களின் மீது மிருகத்தனமான வன்முறையை பயன்படுத்தினர்.