உத்தரபிரதேச சர்ச்சில் 11 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கன்னியாகுமரி பாதிரியார்!
உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 11 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேவாலய பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் எஃப்ஐஆர் பதிவு செய்தார்.குற்றம் சாட்டப்பட்டவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆல்பர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தேவாலய வளாகத்தில் உள்ள பள்ளிக்கு தனது மகளை அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், இரத்தப்போக்கு மற்றும் அவரது அந்தரங்க பகுதிகளில் காயங்களுடன் வீட்டை அடைந்தார்.பின்னர் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்த அவர், இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொன்றுவிடுவதாக பாதிரியார் மிரட்டியதாக கூறினார்.
பலாத்காரம், போக்சோ, எஸ்சி-எஸ்டி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) நீரஜ் குமார் ஜாடவுன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆகியோரின் டிஎன்ஏ மாதிரி மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பி தெரிவித்தார்.
இரண்டு மாதிரிகளும் சோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். தடயவியல் குழுவும் தேவாலயத்திற்கு வருகை தரவுள்ளது.உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு, தேவாலயத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Inputs From: deccanherald