உலகப்போர் மத்தியிலும் உலகிற்கு சோறு போடும் இந்தியா - 500,000 டன் கோதுமையை ஏற்றுமதி!
India Inks Deals To Export 500,000 Tonne Wheat As Global Prices Rise Amid Russia-Ukraine Crisis
இந்தியா இந்த ஆண்டு 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடியால் ஏற்பட்ட இடையூறுகளால் சர்வதேச சந்தையில் தானியங்களின் விலை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் 5 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
உலக கோதுமை ஏற்றுமதியில் 30 சதவிகிதம் பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் மூண்டதால், அவர்களுக்கு மாற்றாக இந்திய வர்த்தகர்களிடம் ஆர்டர் குவிவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது .
இந்தியா தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக கோதுமை விளைச்சலில் சாதனை செய்து வருவதால், பெரிய அளவிலான கோதுமை இருப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்து வருவதால், ஏற்றுமதி வாய்ப்பிலும் வர்த்தகர்கள் ஆர்வமாக உள்ளனர். திங்களன்று (மார்ச் 7) ஐரோப்பிய கோதுமை விலை 400 யூரோக்களாக உயர்ந்தது.
இந்த நேரத்தில் இந்தியா மட்டுமே பெரிய, நிலையான கோதுமை சப்ளையராக இருக்க முடியும் என்பதை சர்வதேச டீலர்கள் அறிந்திருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளனர். சமீபத்திய நாட்களில் சுமார் 500,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை ஆதரிப்பதாகவும், தனியார் நிறுவனங்களின் ஏற்றுமதியை எளிதாக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.