பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் இந்தியாவிடம் உள்ளதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

No proposal to recognise Bitcoin as currency

Update: 2021-12-01 06:30 GMT

நாட்டில் பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிட்காயின் பரிவர்த்தனைகள் குறித்த தரவுகளை அரசாங்கம் சேகரிக்கவில்லை என்றும் அவர் மக்களவையில் தெரிவித்தார். பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, நிதி அமைச்சர், "இல்லை" என்று பதிலளித்தார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021ஐ அரசு பட்டியலிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை அனுமதிக்கும் அதே வேளையில் அடிப்படை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக ஒரு சில கிரிப்டோகரன்சிகளைத் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்ய இந்த மசோதா முயல்கிறது.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதற்கான செயல்பாட்டில் உள்ளது. மேலும் 'வங்கி நோட்டு' வரையறையில் டிஜிட்டல் கரன்சியையும் சேர்க்க, ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கோரி நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது.

பணமதிப்புகளை டிஜிட்டலில் சேர்ப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934ல் திருத்தம் செய்வதற்கு, 2021 அக்டோபரில், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு முன்மொழிவை அரசாங்கம் பெற்றுள்ளது. எந்த இடையூறும் இல்லாமல் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு கட்ட செயலாக்க உத்தியை உருவாக்க வேண்டும்" என்று நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.


Tags: