"மோடிதான் நம் தலைவர், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்": பீகாரில் திடீர் U-turn அடித்த பாஸ்வான் மகன்!
"மோடிதான் நம் தலைவர், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்": பீகாரில் திடீர் U-turn அடித்த பாஸ்வான் மகன்!
பீகார் சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான லாலு கட்சி மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தனுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.
ஆனால் நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நிதிஷ்குமாருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் செய்திகள் வந்தன.
மதுவுக்கு தடை விதித்துவிட்டு கள்ளச்சாராயததை நிதிஷ் அரசு ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது கட்சியினர் ஏகபோக சாராய வியாபாரிகளாக மாறிவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத அளவில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நிதிஷ்குமார் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் இப்போது ஆளாகி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இன்னிலையில் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்கள் என 10 பேர் மீது நிதிஷ்குமார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மறைந்த மத்திய அமைச்சர் மகனும் லோகசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தொகுதி ஒதுக்கீட்டு பிரச்சினையில் பாஜக கூட்டணிக்கு எதிராக தனியாக களம் இறங்கினார்.