144 தடை உத்தரவு எதிரொலி.. 64 வாகனங்கள் பறிமுதல்.. பாரூர் இன்ஸ்பெக்டர் அதிரடி.!

144 தடை உத்தரவு எதிரொலி.. 64 வாகனங்கள் பறிமுதல்.. பாரூர் இன்ஸ்பெக்டர் அதிரடி.!

Update: 2020-04-07 10:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 64 வாகனங்கள் அதிரடியாக போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி இரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட்கங்காதர் உத்தரவின்பேரில் 1300க்கும் மேற்பட்ட போலீசார், 300க்கும் மேற்பட்ட ஊர் காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலிசார் பாரூர் காவல் நிலையங்களுக்கு உட்பட கிராமங்களான பாரூர், அரசம்பட்டி, செல்லக்குட்டப்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, தேவிரஹள்ளி, குடிமேனஹள்ளி, பாப்பாரப்பட்டி, புலியூர், மேட்டுக்கடை  கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பின்பற்றாமல் வாகனங்கள் இயக்கிய 64 வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள தன்னார்வலர்கள், நற்பணி மன்றங்கள், ரசிகர் மன்றங்கள் ஆகியோரை தனித்தனியே அழைத்து ஆலோசனை நடத்தி 144 தடை உத்தரவு பின்பற்றவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவும் மருத்துவ குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Similar News