இ-பாஸ் இருந்தாலும் நீங்க பாண்டிக்குள்ள வர முடியாது - போலீசார் கெடுபிடி.!

இ-பாஸ் இருந்தாலும் நீங்க பாண்டிக்குள்ள வர முடியாது - போலீசார் கெடுபிடி.!

Update: 2020-06-17 13:32 GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா தொற்று அதிகரிப்பதாக பரிசோதனையில் தெரியவந்த்தை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மருத்துவத்தை தவிர்த்து இ-பாஸ் வைத்து இருந்தாலும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் கோரிமேடு எல்லை, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரும் மதகடிப்பட்டு எல்லை, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து புதுச்சேரி வரும் எல்லை, கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் முள்ளோடை எல்லை ஆகிய எல்லைகளில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் மேலும் மருத்துவம் பார்க்க வந்தவர்களை தவிர்த்து இ-பாஸ் வைத்து இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதமும் விதித்தனர். புதுச்சேரி மாநில எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வந்தவர்கள் உள்ளே நுழைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

Similar News