காமராஜர் சிலை சேதம் - குமரியில் பதற்றம்!
காமராஜர் சிலை சேதம் - குமரியில் பதற்றம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே பள்ளிவிளை ஜங்ஷனில் காமராஜர் மார்பளவு சிலை உள்ளது . இந்த சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து தகவல் வெளியானது.
இதை அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து வடசேரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.