20 வீரர்கள் பலியான இரவில் சீனாவுக்குள் புகுந்து விளாசிய நம் வீரர்கள் பற்றி புதிய தகவல்கள்: கட்டாக் வீரர்கள் காட்டிய கைவரிசையில் நூற்றுக்கணக்கான சீன மூக்குகள் உடைந்தது அம்பலம்.!
20 வீரர்கள் பலியான இரவில் சீனாவுக்குள் புகுந்து விளாசிய நம் வீரர்கள் பற்றி புதிய தகவல்கள்: கட்டாக் வீரர்கள் காட்டிய கைவரிசையில் நூற்றுக்கணக்கான சீன மூக்குகள் உடைந்தது அம்பலம்.!
சமீபத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டை சீன ராணுவம் மீறியதை அடுத்து நடைபெற்ற மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சீனர்கள் தரப்பில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும் கூறப்பட்டது.
ஆனால் புதிதாக சண்டை களத்தில் இருந்து வந்த தகவல்படி 3 கட்டங்களாக இந்த மோதல்கள் நடைபெற்றதாகவும் கடைசி கட்ட மோதலில் நம் பீகார் பிரிவு வீரர்கள், கட்டாக் வீரர்கள், பஞ்சாப் வீரர்கள் ஆகியோர் ஓன்று திரண்டு பல பிரிவுகளாக அணி வகுத்து சீன எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட சீன படையினரை துவம்சம் செய்ததாகவும், ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடை பெற்ற இந்த நள்ளிரவு மோதலில் ஏற்கனவே கூறப்பட்டதை விட பல மடங்கு சீனர்கள் பலியாகி இருக்கலாம் என இப்போது தெரிய வந்துள்ளது.
இந்த மோதலுக்கு முன்பே இந்திய-சீன ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீன ராணுவம் வைத்திருந்த அறிவிப்புப் பலகையை நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் கேட்டிருந்தது. அதற்கு சீனாவும் ஒப்புக் கொண்டது.
ஆனால் இந்த அறிவிப்பு பலகையை சொன்னபடி அப்புறப்படுத்தாததால் 16 வது இந்திய இராணுவப் பிரிவான பிஹாரி ரெஜிமென்ட் படை வீரர்கள் சிலர் தங்கள் படை தலைவர் கர்னல் சந்தோஷ் பாபுவுடன் அந்த பலகை அமைத்திருந்த இருந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த சீன ராணுவத்திடம் அதை அகற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், சீன ராணுவ வீரர்கள் மறுப்புத் மறுத்துள்ளனர்.
ஆனால் அவர்களிடம் பேசியதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நம் வீரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்தனர்.
அப்போது சீனர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பு சில மணித்துளிகள் மட்டுமே நடைபெற்றது. இது முதல்கட்ட தாக்குதல் என்றும், காயமடைந்த வீரர்களை அனுப்பிவிட்டு மேலும் படை வீரர்களை அழைத்து வருமாறு உத்தரவிட்டு இந்திய எல்லையை பாதுகாக்க அப்போது வீரத்துடன் கர்னல் சந்தோஷ் பாபு நின்றதாகவும், சீன வீரர்கள் மீண்டும் அங்கு வருவார்கள் என திட்டமிட்டு அவர் சில வீரர்களுடன் மட்டும் அங்கு நின்றிருந்ததாக நேரில் பார்த்த வீரர்கள் தங்களை தொடர்பு கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளனர்.