புதுச்சேரி : 500ஐ தாண்டிய கொரோனா.!

புதுச்சேரி : 500ஐ தாண்டிய கொரோனா.!

Update: 2020-06-25 12:26 GMT

கொரோனா குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரியில் நேற்று 550 நபர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 39 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மருத்துவமனையில் 306 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 187 நபர்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார் இதேபோல் சிகிச்சை பலனின்றி இதுவரை 9நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடப்பட்ட முழுவதற்குமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட உள்ளது என்றார் மேலும் நாள் தோறும் ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் மாநிலத்தில் இல்லாத நிலையிலும் கடந்த 3 மாதங்ளாக அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Similar News