அருண் விஜயின் 'மாஃபியா' திரைப்படத்தின் !! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

அருண் விஜயின் 'மாஃபியா' திரைப்படத்தின் !! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Update: 2019-07-03 08:39 GMT


கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு 'மாஃபியா' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.


‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அதனைத் தொடர்ந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பைனான்ஸ் பிரச்சினையால் அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. சில மாதங்கள் காத்திருந்துவிட்டு, தற்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.


லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். அதில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 'மாஃபியா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.


படத்தின் போஸ்டரில் அத்தியாயம் - 1 எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் வெற்றியடைந்தால் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல, இந்தப் படத்தையும் ஒரே கட்டமாக முடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன். முழுக்க சென்னையைச் சுற்றி 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது அருண் விஜய் 'பாக்ஸர்', 'சாஹோ' மற்றும் 'அக்னிச் சிறகுகள்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களுக்கு இடையே 'மாஃபியா' படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.




Similar News