அஸ்ஸாம் : பக்ஜன் எண்ணெய்க்கிணற்றில் மூன்றாவது நாளாகப் பற்றி எரியும் தீ - அணைக்க ஒரு மாதம் ஆகுமாம்.! #AssamOilWellFire
அஸ்ஸாம் : பக்ஜன் எண்ணெய்க்கிணற்றில் மூன்றாவது நாளாகப் பற்றி எரியும் தீ - அணைக்க ஒரு மாதம் ஆகுமாம்.! #AssamOilWellFire
அஸ்ஸாமில் மூன்றாவது நாளாக கட்டுக்கடங்காமல் எரியும் எண்ணெய்க் கிணற்றில் பற்றியுள்ளத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 35 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் தீயில் எரிந்து விட்டதாகவும், 7000 பேர் அந்தப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த முயற்சியில் அஸ்ஸாமின் டின்சுகியா மாவட்டத்தில் எண்ணெய் கிணறு வெடிக்கும் இடத்திற்கு அருகே ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ONGC (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர்.
10 கிமீ தூரத்திலிருந்து பார்க்க முடியும் அளவுக்கு தீ மிகவும் மோசமாக இருக்கிறது.
ஆயில் இந்தியா லிமிடெட் இன் செய்தித் தொடர்பாளர் திரிதிவ் ஹசாரிகா கூறுகையில், OIL இன் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நெருக்கடி மேலாண்மை குழு மற்றும் OIL அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கிணறு அஸ்திவாரப் பகுதியைத் தவிர, அந்த இடத்தைச் சுற்றியுள்ள தீ பெரும்பாலும் அணைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிணற்றை மூடும் வரை கிணற்றின் வாயில் எரிவாயு எரியும்.
சுமார் 200 மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட தீ சுமார் 15 வீடுகளை முழுவதுமாக எரித்துவிட்டது, மேலும் 15 வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
"எண்ணெய் கிணறு ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் OIL அமைத்த 12 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று ஹசாரிகா தெரிவித்தார்.
தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் ஆகும் என்று டின்சுகியா மாவட்ட நிர்வாகங்களின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.