திருப்பதி கோவில்: 9.20 கோடி நன்கொடை வழங்கிய சென்னை குடும்பம்!

திருப்பதி கோவிலுக்கு ரூபாய் 9.20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-18 00:45 GMT

ஆந்திரப் பிரதேசம், திருப்பதியில் பக்தர்கள் எப்போதும் காணிக்கைகள் தருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது .எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு ₹3.20 கோடியைப் பயன்படுத்துமாறு TTD கோவிலில் தலைவர் சுப்பா ரெட்டியிடம் ரேவதி விஸ்வநாதன் வலியுறுத்தினார். சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய நன்கொடையாக பிப்ரவரி 17 அன்று, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பம் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு ₹3.20 கோடி ரொக்கம் மற்றும் ₹6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நன்கொடையாக அளித்தது.


இந்த குடும்பத்தின் பின்னணியில் இறந்த தனது சகோதரி பர்வதம் பெயரில் உள்ள இரண்டு குடியிருப்பு வீடுகள் தொடர்பான சொத்துக்களின் உரிமைப் பத்திரத்தை TTD தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் ஒப்படைத்த ரேவதி விஸ்வநாதன், திருப்பதியில் குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு ₹3.20 கோடியைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். அவரது சகோதரி தனது வாழ்நாள் முழுவதும் ஸ்பின்ஸ்டராக இருந்ததாகவும், அவர் இறந்த பிறகு தனது சொத்துக்கள் மற்றும் வங்கியில் உள்ள பணத்தை மலைக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாகவும் கூறினார்.


எனவே இழந்த தன் சகோதரியின் கடைசி ஆசையை, நிறைவேற்றி இந்த நன்கொடை பணத்தை அந்த குடும்ப வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தலைமைக் கடவுளின் தீவிர பக்தரான அவரது சகோதரி, கடந்த காலங்களில் கூட TTD ஆல் நடத்தப்படும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ஏராளமான பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் அவரது விருப்பத்தின்படி தற்போதைய நன்கொடை நிதியுதவி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். 

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News